Ads 468x150px

Labels

Tuesday, November 9, 2010

புரிந்துணர்வுக்கு நன்றி!

       ஷம்சுல் இஸ்லாம் சங்கம் தனது வலைத்  தளத்தை உருவாக்கும் முயற்சியில்  ஈடுபட்டிருக்கும்போது, திடீரென்று சங்கப் பெயரிலேயே ஒரு வலைத்  தளம் யாராலோ உருவாக்கப்பட்டுச்  சில நாட்கள் வலம் வந்ததை நாம் அறிந்து வியந்தோம்.   சங்கத்தால் அனுமதி அளிக்கப்படாத அந்தத் தளத்தை நாம் விரும்பவில்லை.  என்றாலும், அதில் முனைந்த அன்பர்களை முறையாகத் தொடர்பு கொண்டு, அதை நிறுத்தும்படிக் கோரினோம்.  அவர்கள் சில நாட்கள் தயக்கத்தின் பின், அதற்குச் சம்மதித்தார்கள்.

      முறையான மூடுவிழாவுக்கு அவர்கள் எடுத்துக்கொண்ட சுணக்கத்தை நாமும் பொருத்துக்கொண்டோம்.  அல்ஹம்து லில்லாஹ்!  கருத்து மோதல், ஒற்றுமையின்மை, வதந்தி பரப்புதல் இவையனைத்தும் கூடாது என்பதால்தான், அந்தச் சகோதரர்களை நாம் கட்டாயப் படுத்தினோம்.  அல்லாமல், அவர்களைத் தரம் தாழ்த்துவதோ, அவர்களிடம் குறை காண்பதோ எமது நோக்கமன்று.

      அந்த  முயற்சியில் ஈடுபட்டவர்கள்  மட்டுமன்றி, மற்றவர்களும் சங்கம் பற்றித் தங்கள் கருத்துகளை இப்பதிவில் வைக்கலாம்.  மாற்றுக் கருத்துகளாக இருப்பினும், அவை constructive criticisms ஆக இருந்தால், நிச்சயமாக நாம் அவற்றைப் பரிசீலிப்போம் என்பதை இதன் மூலம்  தெரிவித்துக்கொள்கிறோம்.     

      சங்கத்துக்கு  வந்த சர்ச்சைக்குரிய பிரச்சினைகள் இன்னும் ஏராளம் இருக்கின்றன.  அவற்றை ஒவ்வொன்றாகத் தூசி தட்டி எடுத்துத் தீர்வு காண வேண்டியதிருக்கிறது.  இதற்கிடையில், புதிய பிரச்சினைகளும் வந்துகொண்டிருக்கின்றன.  எனவே, அவசரம் அவசியம் கருதித்தான் தீர்வுகள் வழங்கப்படுகின்றன.  அது மட்டுமன்றி, ஷரீஅத்தின் அடிப்படையில் முடிவெடுக்கப்பட வேண்டிய பிரச்சினைகளை நமதூர் ஆலிம்களிடம் ஒப்படைத்து, குர்ஆன்-ஹதீஸ் அடிப்படையில் அவர்கள் தீர்ப்பளிப்பார்கள்.  அதனாலும் சுணக்கம் ஏற்படலாம்.

      இவை போன்ற காரணங்களைப் புரிந்துணர்வோடு ஏற்று, நமதூர்ச் சகோதரர்கள் தங்கள் ஒத்துழைப்பைத் தருமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம். 

No comments:

Post a Comment

இறைக் கட்டளை

இன்னும் நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றி பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்து விடாதீர்கள்.(அல்-குர்ஆன் 3: 103)