Ads 468x150px

Labels

Tuesday, February 8, 2011

செயற்குழுக் கூட்டம்

"Better late than never" என்பதற்கொப்ப, சென்ற டிசம்பர் இறுதியில் நடைபெற்ற நமது சங்கத்தின் செயற்குழுக் கூட்டத் தீர்மானங்களைப் பதிவு செய்வதில் நிறைவடைகின்றோம். 

  • புதிதாக உருவாகி வரும் ஷம்சுல்  இஸ்லாம் சங்கத்தின் கட்டடப்  பணியை விரைவு படுத்தி நிறைவு செய்வதற்காக, நல்லுள்ளம் கொண்ட நமதூர்ச் சகோதரர்களிடம் வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் நிதி வசூல் செய்வது பற்றிய அறிவிப்பை இன்டர்நெட்டில் வெளியிடுவது.
 
  • முன்பு  முறையாகக் கொடுக்கப்பட்ட  சங்கத்தின் திருமணச் சான்றிதழைத்  தவறாகப் பயன்படுத்தியவர்கள் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற பரிந்துரை பரிசீலிக்கப்பட்டது.  அதன்படி, அதில் பங்கெடுத்தவர்களை அடையாளம் கண்டு, அவர்களை சங்கத்திற்கு மன்னிப்புக் கடிதம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.  அத்துடன், நமதூரில் நடக்கும் திருமணங்களுக்கு நம்மிடம் ஒப்புதல் பெறாமல் சான்றிதழ் வழங்கக் கூடாது என்று அரசு காஜி அவர்களுக்கும் மனு அனுப்பப்பட்டது.
     
  • சங்கத்தின் புதிய நிர்வாகக் குழுவின் பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாப் எஸ்.ஏ.எம். ஜமாலுத்தீன் அவர்கள் இறந்ததையொட்டி, தற்போதையப் பொருளாளராக எம்.பி. அஹமது (அதிரை அஹமது) நியமனம் பெற்றார். அத்துடன், சங்கத்தின் அவ்வப்போதைய செயல்பாடுகளையும் முன்னேற்றத்தையும் உலகறியச் செய்யும் விதத்தில், வலைத்தளத்தின் மூலம் பதிவு செய்து வெளியிடும் பொறுப்பையும் அதிரை அஹமது அவர்கள் ஏற்று நடத்துவார்.
 
  • சங்கத்தின்  புதிய நிர்வாகக் குழு பொறுப்பேற்ற 1-4-2010 முதல் 30-11-2010 வரையுள்ள வரவு-செலவுக் கணக்கு, சங்கச் செயலாளரால் வாசிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
 
  • ECR நெடுஞ்சாலையில் இருக்கும் வயலை (சங்கத்திற்குச் சொந்தமானது) விற்பனை செய்வதற்கான முடிவெடுக்கப்பட்டு, தரகர்கள் மூலம் அதனை விற்பனை செய்ய ஏற்பாடு செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.
 
  • சங்கத்தின்  சட்ட திட்டங்கள் (பைலா), சில திருத்தங்களும் மாற்றங்களும் இணைப்புகளும் செய்யப்பட வேண்டியிருப்பதால், அப்பொறுப்பை, வக்கீல் அப்துர்ரஸ்ஸாக் அவர்களிடமும், மார்க்க ஆலோசனைக் குழுத் தலைவர் மவ்லானா முஹம்மது இப்ராஹீம் அவர்களிடமும் ஒப்படைத்து, அப்பணியைத் துரிதப்படுத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.
    • சங்கத்தின் ஆதரவில் நடைபெறும் திருமணங்களின் பதிவேட்டில் இதுவரை இடம்பெறாமல் இருந்த சங்க நிர்வாகிகளின் சாட்சிக் கையொப்பங்கள் இணைக்கப்பட வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.  

    Sunday, February 6, 2011

    சங்கம் திறம்படச் செயல்பட...

    சங்கம்  திறம்படச் செயல்பட... 

          'முன்னேற்றப்  பாதையில் ஷம்சுல் இஸ்லாம்  சங்கம்' என்ற தலைப்பில்  நமது வலைத் தளத்தில்  ஓர் இடுகை இட்டு, அதற்குச்  சான்றாக, புதிதாக உருவாகிவரும்  சங்கக் கட்டுமானப் பணியின் நிழற்படங்களையும் இணைத்திருந்தோம்.

           
                           கடந்த காலத்தில் ஓரிருவரின் தன்னிச்சைப் போக்கால் சங்கத்துக்கு ஏற்பட்ட களங்கத்தைப் போக்குவது, தற்போதைய சங்க நிர்வாகிகளின் அன்றாடச் செயல்பாடுகளுள் ஒன்றாக இருக்கும் நிலையில், சங்கம் நிதானமாக, முறையாக (slowly but steadily) இயங்கி வருகின்றது.

           
                         சங்கத்தின்  பழைய கட்டடம் இடிக்கப்பட்டு, புதிய கட்டடப் பணி நடந்துவரும் இக்கால கட்டத்தில், தற்காலிகமாக அருகில் உள்ள செக்கடிப் பள்ளியில் சங்கத்தின் அன்றாட அமர்வுகள் நடந்துவருவதில் பல வசதிக் குறைவுகள் இருப்பதை நாம் உணர்கின்றோம்.  உதாரணமாக, ஒரு சாரார் தமது தரப்பு வாதத்தை எடுத்துரைக்கும்போது, சங்க நிர்வாகிகளைத் தவிர மற்றவர்களும் அங்கு வந்து அமர்ந்துகொள்வதால், அவர்கள் தமது தகவல்களைக் கூறத் தயங்குகின்றனர். 

          மேலும், சங்கத்தின் ஆவணங்களைப் பத்திரப்படுத்தி  வைப்பதும் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கின்றது.  பள்ளிவாசலில் பலரும் வந்து போகும் நிலையிருப்பதால், அவற்றைப் பாதுகாப்பது சிரமமாக இருக்கிறது.  பொது மக்கள் புதிய நிர்வாகத்தினரைச் சந்தித்துத் தம் கோரிக்கைகளை ஒப்படைப்பதற்காக, தலைவர் அல்லது செயலாளரின் வீடுகளுக்கு வரவேண்டிய நிலைக்கு உள்ளாகின்றனர்.

          இந்நிலையில், சங்கக் கட்டடப் பணியோ, ஆமை வேகத்தில் நடந்து வருகின்றது!  காரணம்:  காசில்லை!  ஆகவே, சங்க நிர்வாகக் குழுவினர், தாமே முன்னின்று கோரிக்கை வைப்பதைப் போல், இங்கே அணி வகுத்து, உங்கள் முன் காட்சி தருகின்றனர்:


    தலைவர்      து. தலைவர்  செயலாளர்    து. செயலாளர் பொருளாளர் 
    Your browser may not support display of this image.
        

          பொறியாளர் ஹலீம்தீன் அவர்கள் அண்மையில்  சமர்ப்பித்த மதிப்பீட்டு  அறிக்கைப்படி, முழுமையாகக்  கட்டி முடிக்க 37 இலட்சம் ரூபாய் செலவாகும்.  இதுவரை, சங்கத்தின் பொருள் இருப்பிலிருந்து ஐந்து இலட்சம் ரூபாய் மட்டும் கட்டடப் பணியில் செலவிடப்பட்டுள்ளது.  மீதித் தொகையை நல்லுள்ளம் கொண்ட நம்மூர் சகோதரர்கள் மற்றும் கொடையாளர்களின் பொருளுதவி மூலம் செய்து முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

          ஊர்ப் பொது நலனில் அக்கறையுள்ள  அனைவரும் உங்கள் உங்கள் பங்களிப்பைப் பணமாகவோ பொருளாகவோ வழங்கி உதவுமாறு நிர்வாகத்தினர் அன்போடு கோரிக்கை வைக்கின்றனர்.  உங்கள் தாராளப் பங்களிப்புகள், பொது நலச் சங்கமான ஷம்சுல் இஸ்லாம் சங்கம் திறம்படச் செயல்பட உதவி புரியும்.


          சங்கத்தின்  வங்கிக் கணக்கு விவரம்:
           
                    Shamsul Islam Sangam
          Indian Bank, Adirampattinam Branch
          Current Account No. 921555264

    இறைக் கட்டளை

    இன்னும் நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றி பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்து விடாதீர்கள்.(அல்-குர்ஆன் 3: 103)