Ads 468x150px

Labels

Saturday, December 15, 2012

அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் ஒன்பதாவதுக் கூட்டம் !






இன்று [ 14-12-2012 ] வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் புதுத்தெரு மஹல்லாவில் உள்ள மிஸ்கீன் சாஹிப் மஸ்ஜிதில் நடைபெற்ற அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் ஒன்பதாவதுக் கூட்டத்திற்கு  AAMF'ன் தலைமை நிர்வாகிகள் M.M.S. சேக் நசுருதீன், பேராசிரியர் M.A. முஹம்மது அப்துல் காதர் ஆகியோருடன் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம், முன்னாள் சம்சுல் இஸ்லாம் சங்க செயலாளர் M.B. அபூ பக்கர்,  அதிரை பைத்துல்மால் செயலாளர் அப்துல் ஹமீத், டாக்டர் ஹனீப், முன்னாள் தலைமை ஆசிரியர் S.K.M. ஹாஜா முஹைதீன் மற்றும் புதுத்தெரு மஹல்லாவைச் சேர்ந்த அபூ பக்கர், பஷீர் அஹமது ஆகியோர் பங்களிப்புடன் இனிதே துவங்கியது.



நிகழ்ச்சியின் துளிகள்...

1. கிராஅத் : இமாம் ஹாஜா முஹைதீன் அவர்கள்

2. வரவேற்புரை : ஹாஜி ஜனாப்  M. M.S. சேக் நசுருதீன் அவர்கள்.

3. A. முஹம்மது இப்ராஹீம் ஆலிம் அவர்கள் தனது சிறப்புரையில் AAMF'ன் அவசியம் குறித்து பேசினார்கள்.

4. சென்றமாத AAMF'ன் எட்டாவதுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் பற்றிய விவரங்கள் இக்கூட்டத்தில் பேராசிரியர் M.A. முஹம்மது அப்துல் காதர் அவர்களால் வாசித்துக் காண்பிக்கப்பட்டது.



5. AAMF'ன்  பொருளாளர் K.M. பரக்கத் அலி அவர்களின் ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, துணை பொருளாளராக  செயல்பட்டுக் கொண்டிருந்த மான் A. நெய்னா முஹம்மது அவர்கள் புதிய பொருளாளராக தொடர்ந்து செயல்படுவார் என அனைவராலும் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.

6. தரகர் தெரு ஜமாத் நிர்வாகத்தினரிடேயே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளை களைந்து அவர்களிடேயே சுமூகத்தொடர்பை ஏற்படுத்துவது தொடர்பாக இக்கூட்டத்தில் பேசப்பட்டன. இப்பிரச்சனை R.D.O. விசாரணையில் இருப்பதாகவும், விரைவில் சுமூக தீர்வு எட்டும் என்று இக்கூட்டத்தில் கலந்துகொண்ட தரகர் தெரு ஜமாத் நிர்வாகிகளின் ஒரு சாரார் தெரிவித்ததையடுத்து, நல்லதொரு தீர்வு விரைவாக நிறைவேற அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டன.

7. நமதூரில் சமிபத்தில் நடந்த துன்பியல் நிகழ்வு குறித்து கீழத்தெரு மஹல்லா சார்பாக AAMF'க்கு வழங்கப்பட்ட கோரிக்கைக் கடிதம் அனைவரிடத்திலும் வாசித்துக் காண்பிக்கப்பட்டது.

கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் :

பெறுநர் :
தலைமை நிர்வாகிகள்,
அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு [ AAMF ]
அதிராம்பட்டினம்

நமதூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற துன்பியல் நிகழ்வு நம்மையெல்லாம் அதிர்ச்சிக்குள்ளாக்கியதோடு மட்டுமல்லாமல் வேதனை தருவதாகவும் அமைந்துவிட்டது. 

குற்றவாளி காவல்துறையின் பிடியில் இருப்பதால் அவரின் மேல் உள்ள வழக்கு விசாரணையை எவ்வித குறுக்கீடுகள் இன்றி விரைவில் முடிவுக்கு கொண்டுவந்து அவருக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர அதிரை காவல்துறையை அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு சார்பாக கேட்டுக்கொள்ள வேண்டும். இவை பாதிக்கப்பட்டோர் சற்று ஆறுதலடையும் வகையிலும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமலும் இருப்பதாக அமையும். 

பாரம்பரிய மிக்க நமதூரில் இதுபோன்ற சம்பவங்கள் இனி தொடராமல் இருப்பதுக்குரிய முயற்சியில் இப்போதே நாம் கவனம் எடுத்துக்கொண்டு அவற்றை தடுப்பதற்குரிய வழிமுறைகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இதற்கு அதிரை அனைத்து மஹல்லா சார்பாக கட்டுக்கோப்புடன் கூடிய ஒரு ஒழுங்கு முறையை பின்பற்றி அவற்றை அனைத்து மஹல்லாவிலும் செயல்பாட்டுக்கு கொண்டுவருவது அவசிமானதாகும்.

பிள்ளையை இழந்துள்ள அக்குடும்பத்திற்கு பொறுமையையும் மன அமைதியையும் வலிமையையும் கொடுப்பாயாக என்று ஏக இறைவனிடம் பிரார்த்தித்தவர்களாக...

இப்படிக்கு,
தலைமை நிர்வாகிகள்
கீழத்தெரு மஹல்லா – அதிரை

வழக்கு விசாரணையில் இருப்பதால் AAMF'ன் கெளரவ சட்ட ஆலோசகர் சகோ. A.J. அப்துல் ரெஜாக் B.A., B.L அவர்களிடம் மேற்படி நடவடிக்கை குறித்து ஆலோசனைகளைப் பெறுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.




8. AAMF சார்பாக நமதூரைச்சுற்றி இருக்கக்கூடிய கிராமங்களாகிய ஏரிப்புறக்கரை, ராஜாமடம், மகிளங்கோட்டை, தொக்காலிக்காடு, பழஞ்சூர், மளவேனிக்காடு, நடுவிக்காடு, விலாரிக்காடு, உள்ளூர் புதுக்கோட்டை, நரசிங்கபுரம், கரையூர் தெரு, பழஞ்செட்டித்தெரு, காந்தி நகர், முத்தம்மாள் தெரு போன்ற கிராம பஞ்சாயத்தார்களை சந்திப்பது என்றும், நம்மிடையே நல்லிணக்கமான சூழலை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் வருகின்ற ஜனவரி இரண்டாவது வாரத்தின் விடுமுறை தினத்திற்கு பிறகு 'சந்திப்பு' நிகழ்ச்சிக்கு அவர்களை அழைத்து நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றை செயல்படுத்துவதற்காக AAMF'ன் தலைமை நிர்வாகிகள் M.M.S. சேக் நசுருதீன், பேராசிரியர் M.A. முஹம்மது அப்துல் காதர், மான் A. நெய்னா முஹம்மது, சேக்கனா M.  நிஜாம், P.M.K. தாஜுதீன், M.A. அஹமது ஹாஜா, A. முஹம்மது மொய்தீன்,  இஷாக், E. வாப்பு மரைக்காயர் ஆகியோரைக்கொண்ட குழு ஓன்று நியமனம் செய்யப்பட்டுள்ளன. 

9. இன்று [ 14-12-2012 ]  வாகன விபத்தில் மரணம் அடைந்த சிறுவன் நசீமின் மறுமை வாழ்வை அல்லாஹ் வெற்றியாக்கி வைத்து சுவன பாக்கியத்தை வழங்குவானாக என இக்கூட்டத்தில் துஆ செய்யப்பட்டன.

10. AAMF'ன் ஒன்பதாவது கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட முன்னாள் சம்சுல் இஸ்லாம் சங்க செயலாளர் M.B. அபூ பக்கர்,  டாக்டர் ஹனீப் ஆகியோர் முதல் முறையாக இக்கூட்டத்தில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

11. நிகழ்ச்சிகள் துவாவுடன் இனிதே நிறைவுற்றது.

குறிப்பு : 
அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு [ AAMF ] சார்பாக ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவின்படி ஒவ்வொரு மாதமும் ஒன்பது முஹல்லாவிலும் தலா ஒரு கூட்டம் எனவும், அதன்படி அடுத்தக் கூட்டமாக "மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்கம் மஹல்லாவில்"நடைபெறும் [ இன்ஷா அல்லாஹ் ! ] இதற்கிடையில் அவசரத் தேவைகளைக் கருத்தில் கொண்டு கூட்டப்படுகிற கூட்டங்களும் நடைபெறும்.



Saturday, November 17, 2012

அமீரக AAMF–ன் நவம்பா்-2012 மாத செயற்குழு கூட்டம்


பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும். [வரஹ்]

 

இடம்: தலைவா் A.தமீம் ROOM

 தேதி: 16-11-2012

 

அமீரக AAMF–ன் நவம்பா்-2012 மாத செயற்குழு கூட்டம் தலைவா் A.தமீம் அவா்கள் தலைமையில் நடைபெற்றது.

அமா்வில் ஆலோசித்து எடுத்த தீா்மானங்கள் :

1)  2013- ஆண்டுக்கான நாள்காட்டி (Calender) அமீரக AAMF சார்பாக கடந்த வருடமும் அச்சிடுவது என முடிவானது. நாள்காட்டி அச்சிடுவதற்கன செலவினங்களை அனைத்து முஹல்லாவும் ஏற்றுக் கொள்வது என தீா்மானிக்கப்பட்டது.

2)  நமதுார் தரகா் தெரு முஹல்லா நிர்வாகத்தில் உள்ளவா்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளை களைந்து, தரகா் தெரு முஹல்லா மக்களுல் ஒரு நல்லணக்கத்தை ஏற்படுத்த அதிரை AAMF துரித நடவடிக்கை எடுக்க அமீரக AAMF வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

3)  நமதுாரில் அருகில் உள்ள கிராமங்களின் பஞ்சாயத்தார்களை நமது அதிரை AAMF நிர்வாகிகள் சந்தித்து, நமது AAMF –பை அறிமுகம் செய்து, எதிர்காலத்தில் நமக்குல் நல்லிணக்கமான சூழ்னிலைகளை உருவாக்கிக் கொள்ள ஏற்பாடு செய்யும்படி கேட்டுக் கொள்திறோம்.

 


Thursday, November 1, 2012

சம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அணி ஒன்றை ஏற்படுத்த


அஸ்ஸலாமு அலைக்கும்.

கடந்த 30-10-2012 (புதன் கிழமை) நமதூர் சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் அமீரக கிளையின் கோரிக்கையின்படி அதிரையில் சம்சுல் இஸ்லாம் சங்க 

முஹல்லாவுக்கு உட்பட்ட இளைஞர் அணி ஒன்றை ஏற்படுத்துவது,இணையம்/வலைப்பூக்களில் சங்கம் குறித்து பதிவுகள் மற்றும் பின்னூட்டங்களில் 

தவறான கருத்துருவாக்கம் ஏற்படாத வகையில் வலைத்தள பொறுப்பாளர்களைக் கோருவது ஆகிய விசயங்கள் குறித்து அதிரை சம்சுல் இஸ்லாம் 


தலைமையக நிர்வாகிகளுடன் கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

சம்சுல் இஸ்லாம் சங்க தலைவர் ஜனாப். உமர் காக்கா அவர்கள் தலைமையேற்க,துபாய் கிளை ... தலைவர் ஜனாப்.அஸ்லம் வரவேற்புரையுடன் 


கலந்துரையாடல் மாலை அஸர் தொழுகைக்குப் பிறகு தொடங்கியது. அதிரையின் ஏனைய சங்கங்களைப்போன்று சம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கும் 

இளைஞர் அணி அமைப்பதற்கு செயல்திட்டம் வகுப்பது என்ற பெரும்பான்மையினரின் கருத்து ஏற்கப்பட்டு, அதற்கான அறிவிப்பை ஜும்ஆ பயான் 


மற்றும் முஹல்லாவுக்கு உட்பட்ட பள்ளிகளில் அறிவிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

மேலும்,சம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகளால் மஸூரா அடிப்படையில் எடுக்கப்படும் எந்த நடவடிக்கையயியும் விமர்சிப்பதும், அதுகுறித்த தவறான 

பரப்புரை, கருத்துருவாக்கம் ஏற்படாத வகையில் பதிவுகள், பின்னூட்டம் வெளியிடக்கூடாது என்றும் முன்மொழியப்பட்டு அதிரை எக்ஸ்பிரஸ் மற்றும் 

அதிரை நிருபர் வலைத்தள நிர்வாகிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது


கலந்துரையாடலுக்கு அதிரை பேரூராட்சி சேர்மன் சகோ.அஸ்லம்,அதிரை பைத்துல்மால் துணைத்தலைவர் வழக்குரைஞர் சகோ.அப்துல் முனாப்

சவூதி-ஜித்தா அய்டா அமைப்பின் தலைவர் சகோ.சம்சுதீன், அனைத்து முஹல்லாஹ் கூட்டமைப்பின் துபை கிளை தலைவர் சகோ. தமீம் மற்றும் 

சம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு உட்பட்ட பிரமுகர்கள் அழைக்கப்பட்டு மேற்கண்ட விசயங்களுக்கு கருத்து கேட்கப்பட்டது

இப்படிக்கு,
சம்சுல் இஸ்லாம் சங்கம்
துபாய் கிளை

Friday, October 26, 2012

துபாய் AAMF ஹஜ் பெருநாள் சந்திப்பு (2012) துளிகள் [ காணொளி ] !






துபாய் AAMF நோன்பு பெருநாள் சந்திப்பு (புகைப்படங்கள்)


அஸ்ஸலாமு அலைக்கும், 
அல்லாஹ்வின் பேரருளால் 26-10-2012 அன்று ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் டேரா-ஈத்கா மைதானத்தில் அதிகாலை முதலே மக்கள் பெருந்திரளாகக் கூடினர்.

காலை 7:10 மணிக்கு பெருநாள் தொழுகை தொடங்கியது. சரியாக 8:10 மணிக்கு பராஹா சாலை வாசலருகே அதிரைவாசிகள் அணிஅணியாகக் கூடத்தொடங்கினர்.




 சந்திப்புக்கு வந்திருந்த பலர் குடும்பத்தினருடனும் குழந்தைகளையும் அழைத்து வந்திருந்தது கூடுதல் சிறப்பு.
வீடியோ கேமரா மற்றும் தொழில்நுட்ப புகைப்படக் கலைஞர்கள் குழுவினர் அதிரைவாசிகளை சுற்றிச் சுற்றி படம் பிடித்தது, மைதானத்திற்கு வந்திருந்த பிற ஊர்/நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்தது.
 அதிரைவாசிகள் 350 பேருக்கும் அதிகமானோர் கலந்து கொண்டிருந்தது பலருக்கும் மகிழ்ச்சியாக இருந்தைக் காணமுடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்.














அதிரைவாசிகளுக்கு இத்தகைய சந்திப்புகளில் இருக்கும் ஆர்வத்தையே காட்டுகிறது.
இந்த இனிய சந்திப்பின்போது வந்திருந்த அதிரைவாசிகளுக்கு "AAMF" சார்பில் இனிப்பு வழங்கப்பட்டது.

இறைக் கட்டளை

இன்னும் நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றி பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்து விடாதீர்கள்.(அல்-குர்ஆன் 3: 103)