இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் 16-05-2011 திங்கள் கிழமையன்று காலை பத்து மணிக்கு நமது சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் பொதுக்குழுக் கூடம் நடைபெறும். அவ்வமயம் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இதுவரை உறுப்பினர்களாக இணையாதிருக்கும் சம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு உட்பட்ட மஹல்லாக்களின் இருபது வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் உறுப்பினர்களாகச் சேர்ந்துகொள்ளுமாறு கோரப்படுகிறார்கள். கீழ்க்காணும் மஹல்லாக்கள் சங்கத்திற்கு உட்பட்டவையாகும்:
* நடுத்தெரு (மேல்புறம் & கீழ்புறம்)
* வாய்க்கால் தெரு (மேட்டுத்தெரு உள்பட)
* புதுமனைத் தெரு (செக்கடித் தெரு உள்பட)
* ஆலடித் தெரு
* தட்டாரத் தெரு / செட்டித்தெரு / தச்சத்தெரு
* ஆஸ்பத்திரித் தெரு / ஷாதுலியாத் தெரு
* புதுத்தெரு (வடபுறம்)
* கிட்டங்கித் தெரு / மகுதூம் பள்ளித் தெரு / வண்டிப்பேட்டை
* பழஞ்செட்டித் தெரு / எ.ஜே. நகர்
* பிள்ளையார் தெரு / சால்ட் லைன்
* சுரைக்கா கொள்ளை / சங்கத்துக் கொள்ளை
* சி.எம்.பி. லைன் / இஜாபா பள்ளித் தெரு
* எஸ்.எ.எம். நகர்
* பிலால் நகர்
முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டியிருப்பதால், பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் வந்து கலந்து கொள்ளுமாறு கோரப்படுகின்றார்கள்.
அன்புடன் அழைக்கும்: தலைவர் & செயலாளர்