அஸ்ஸலாமு அலைக்கும்
ஆஸ்திரேலியா சிட்னியில் அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்க முஹல்லா கூட்டம், சகோதரர் பஷீர் அவர்கள் வீட்டில் சகோ. மீராசாஹிப் அவர்கள் தலைமையில் நடத்தப் பட்டது. கூட்டத்தில் சம்சுல் இஸ்லாம் சங்க சிட்னி அதிரை சகோதரகள் பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பள்ளிப் படிப்பை முடித்து உயர் கல்வியை தொடர வசதியில்லாத இஸ்லாமிய மாணவ மாணவியர்களுக்கு வரும் கல்வியாண்டிலிருந்து கல்வி உதவித்தொகை வழங்குவது என்று முக்கிய அஜெண்டாவாக எடுத்து தீர்மானம் நிறைவேற்றப் பட்டது..
இந்த நிலையில் கல்வி உதவித் தொகைக்கு தகுதியானவர்கள் யார்? எந்த அடிப்படையில் வழங்குவது? உள்ளிட்ட கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர் பார்க்கிறோம். குறிப்பாக கல்வி நிறுவனங்கள், கல்வி ஆர்வலர்கள் இதில் தகுந்த ஆலோசனைகளை வழங்குவீர்கள் என்று எதிர் பார்க்கிறோம்.
உங்கள் மேலான ஆலோசனைகளை எங்களுக்கு sismaadirai@gmail.com என்ற ஈமெயிலுக்கு செப்டம்பர் மாதம் 30ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இத்தகவலை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இந்த முயற்சியில் வெளி நாட்டில் வாழும் சகோதரர்களும் பங்கேற்க விரும்பினால் மேற்கண்ட ஈ மெயிலுக்கு தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
தகவல்: மீராசாஹிப்
சிட்னி, ஆஸ்திரேலியா.
sismaadirai@gmail.com
sismaadirai@gmail.com