Ads 468x150px

Labels

Saturday, November 17, 2012

அமீரக AAMF–ன் நவம்பா்-2012 மாத செயற்குழு கூட்டம்


பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும். [வரஹ்]

 

இடம்: தலைவா் A.தமீம் ROOM

 தேதி: 16-11-2012

 

அமீரக AAMF–ன் நவம்பா்-2012 மாத செயற்குழு கூட்டம் தலைவா் A.தமீம் அவா்கள் தலைமையில் நடைபெற்றது.

அமா்வில் ஆலோசித்து எடுத்த தீா்மானங்கள் :

1)  2013- ஆண்டுக்கான நாள்காட்டி (Calender) அமீரக AAMF சார்பாக கடந்த வருடமும் அச்சிடுவது என முடிவானது. நாள்காட்டி அச்சிடுவதற்கன செலவினங்களை அனைத்து முஹல்லாவும் ஏற்றுக் கொள்வது என தீா்மானிக்கப்பட்டது.

2)  நமதுார் தரகா் தெரு முஹல்லா நிர்வாகத்தில் உள்ளவா்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளை களைந்து, தரகா் தெரு முஹல்லா மக்களுல் ஒரு நல்லணக்கத்தை ஏற்படுத்த அதிரை AAMF துரித நடவடிக்கை எடுக்க அமீரக AAMF வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

3)  நமதுாரில் அருகில் உள்ள கிராமங்களின் பஞ்சாயத்தார்களை நமது அதிரை AAMF நிர்வாகிகள் சந்தித்து, நமது AAMF –பை அறிமுகம் செய்து, எதிர்காலத்தில் நமக்குல் நல்லிணக்கமான சூழ்னிலைகளை உருவாக்கிக் கொள்ள ஏற்பாடு செய்யும்படி கேட்டுக் கொள்திறோம்.

 


Thursday, November 1, 2012

சம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அணி ஒன்றை ஏற்படுத்த


அஸ்ஸலாமு அலைக்கும்.

கடந்த 30-10-2012 (புதன் கிழமை) நமதூர் சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் அமீரக கிளையின் கோரிக்கையின்படி அதிரையில் சம்சுல் இஸ்லாம் சங்க 

முஹல்லாவுக்கு உட்பட்ட இளைஞர் அணி ஒன்றை ஏற்படுத்துவது,இணையம்/வலைப்பூக்களில் சங்கம் குறித்து பதிவுகள் மற்றும் பின்னூட்டங்களில் 

தவறான கருத்துருவாக்கம் ஏற்படாத வகையில் வலைத்தள பொறுப்பாளர்களைக் கோருவது ஆகிய விசயங்கள் குறித்து அதிரை சம்சுல் இஸ்லாம் 


தலைமையக நிர்வாகிகளுடன் கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

சம்சுல் இஸ்லாம் சங்க தலைவர் ஜனாப். உமர் காக்கா அவர்கள் தலைமையேற்க,துபாய் கிளை ... தலைவர் ஜனாப்.அஸ்லம் வரவேற்புரையுடன் 


கலந்துரையாடல் மாலை அஸர் தொழுகைக்குப் பிறகு தொடங்கியது. அதிரையின் ஏனைய சங்கங்களைப்போன்று சம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கும் 

இளைஞர் அணி அமைப்பதற்கு செயல்திட்டம் வகுப்பது என்ற பெரும்பான்மையினரின் கருத்து ஏற்கப்பட்டு, அதற்கான அறிவிப்பை ஜும்ஆ பயான் 


மற்றும் முஹல்லாவுக்கு உட்பட்ட பள்ளிகளில் அறிவிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

மேலும்,சம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகளால் மஸூரா அடிப்படையில் எடுக்கப்படும் எந்த நடவடிக்கையயியும் விமர்சிப்பதும், அதுகுறித்த தவறான 

பரப்புரை, கருத்துருவாக்கம் ஏற்படாத வகையில் பதிவுகள், பின்னூட்டம் வெளியிடக்கூடாது என்றும் முன்மொழியப்பட்டு அதிரை எக்ஸ்பிரஸ் மற்றும் 

அதிரை நிருபர் வலைத்தள நிர்வாகிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது


கலந்துரையாடலுக்கு அதிரை பேரூராட்சி சேர்மன் சகோ.அஸ்லம்,அதிரை பைத்துல்மால் துணைத்தலைவர் வழக்குரைஞர் சகோ.அப்துல் முனாப்

சவூதி-ஜித்தா அய்டா அமைப்பின் தலைவர் சகோ.சம்சுதீன், அனைத்து முஹல்லாஹ் கூட்டமைப்பின் துபை கிளை தலைவர் சகோ. தமீம் மற்றும் 

சம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு உட்பட்ட பிரமுகர்கள் அழைக்கப்பட்டு மேற்கண்ட விசயங்களுக்கு கருத்து கேட்கப்பட்டது

இப்படிக்கு,
சம்சுல் இஸ்லாம் சங்கம்
துபாய் கிளை

இறைக் கட்டளை

இன்னும் நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றி பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்து விடாதீர்கள்.(அல்-குர்ஆன் 3: 103)