Ads 468x150px

Labels

Tuesday, August 22, 2017

சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு மற்றும் பொதுகுழு கூட்டம் அறிவிப்பு..!





சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வுக்கான தேர்தல் தேதி மற்றும் பொதுக்குழு கூட்டம் பற்றி செய்தி வெளியிடப்பட்டட்டுள்ளது.இதில் சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் தற்போதைய மூன்றாண்டு பதவிக்காலம் வருகிற 15/08/2017 அன்றுடன் முடிவடைகிறது.இதையடுத்து , கீழ்க்கண்ட பதவிகளுக்கு புதிய நிர்வாகிகள் தேர்தெடுக்க சங்கத்தின் பொது குழு கூட்டம் வருகிற 05/09/2017 அன்று மாலை 4:30மணிக்கு நடைபெறவுள்ளது.இந்த பொதுக்குழு கூட்டத்தில்  முஹல்லாகளில் உள்ள சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு புதிய நிர்வாகிகளை தேர்தெடுக்கம் படி அன்போடு சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

1.தலைவர்
2.துணைத்தலைவர்
3.செயலாளர்
4.துணை செயலாளர்
5.பொருளாளர்

மேற்கண்ட பதவிகளுக்கு போட்டிட விருப்பம் உள்ள சங்க சங்க முஹல்லாவாசிகள்  தங்களது விருப்ப மனுவை  03/09/2017 தேதிக்குள் சங்கத்தில் அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.

Thank 
Adiraixpress

Tuesday, August 15, 2017

சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் இந்திய சுதந்திர தின விழாக் கொண்டாட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஆக. 15
இந்தியாவின் 71 வது சுதந்திர தினம் நாடெங்கிலும் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் புதுமனைத் தெருவில் அமைந்துள்ள சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் சுதந்திர தின விழா செவ்வாய்க்கிழமை காலை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு தலைமை வகித்த சங்கத் தலைவர் ஹாஜி அபுல் ஹசன் இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்தார். சங்கச் செயலர் பேராசிரியர் எம்.ஏ முஹம்மது அப்துல் காதர் சுதந்திர தின விழா பேருரை நிகழ்த்தினார். மேலும் முன்னாள் தலைமை ஆசிரியர் எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன், அதிராம்பட்டினம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுந்தர்  ஆகியோர் சுதந்திர தின விழா உரை நிகழ்த்தினார்.

முன்னதாக சம்சுல் இஸ்லாம் இளைஞர் சங்கத் தலைவர் அகமது அனஸ் வரவேற்றார். விழா முடிவில் எம்.எப் முஹம்மது சலீம் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பின் பேரில் பேராசிரியர் கே. செய்யது அகமது கபீர், சம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள், இளைஞர் சங்க நிர்வாகிகள், சம்சுல் இஸ்லாம் சங்க முஹல்லாவாசிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
 


Thank 
Adirainews 

Sent from my iPhone

Monday, August 14, 2017

முதல் முறையாக ஷம்சுல் இஸ்லாம் சங்கம் தேசிய கொடியேற்றம்




நமது திருநாட்டின் 71வது சுதந்திர தின விழா ஷம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் இன்ஷா அல்லாஹ் வரும் ஆகஸ்ட் 15 தேதி செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணிக்கு தேசிய கொடியேற்றி கொண்டாடப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அணைத்து முஹல்லாவாசிகளையும் ஷம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும் சங்க இளைஞர் அமைப்பு அன்புடன் அழைக்கிறது.

இறைக் கட்டளை

இன்னும் நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றி பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்து விடாதீர்கள்.(அல்-குர்ஆன் 3: 103)