அதிராம்பட்டினம், ஆக. 15
இந்தியாவின் 71 வது சுதந்திர தினம் நாடெங்கிலும் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் புதுமனைத் தெருவில் அமைந்துள்ள சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் சுதந்திர தின விழா செவ்வாய்க்கிழமை காலை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு தலைமை வகித்த சங்கத் தலைவர் ஹாஜி அபுல் ஹசன் இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்தார். சங்கச் செயலர் பேராசிரியர் எம்.ஏ முஹம்மது அப்துல் காதர் சுதந்திர தின விழா பேருரை நிகழ்த்தினார். மேலும் முன்னாள் தலைமை ஆசிரியர் எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன், அதிராம்பட்டினம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுந்தர் ஆகியோர் சுதந்திர தின விழா உரை நிகழ்த்தினார்.
முன்னதாக சம்சுல் இஸ்லாம் இளைஞர் சங்கத் தலைவர் அகமது அனஸ் வரவேற்றார். விழா முடிவில் எம்.எப் முஹம்மது சலீம் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பின் பேரில் பேராசிரியர் கே. செய்யது அகமது கபீர், சம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள், இளைஞர் சங்க நிர்வாகிகள், சம்சுல் இஸ்லாம் சங்க முஹல்லாவாசிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
Sent from my iPhone
இந்தியாவின் 71 வது சுதந்திர தினம் நாடெங்கிலும் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் புதுமனைத் தெருவில் அமைந்துள்ள சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் சுதந்திர தின விழா செவ்வாய்க்கிழமை காலை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு தலைமை வகித்த சங்கத் தலைவர் ஹாஜி அபுல் ஹசன் இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்தார். சங்கச் செயலர் பேராசிரியர் எம்.ஏ முஹம்மது அப்துல் காதர் சுதந்திர தின விழா பேருரை நிகழ்த்தினார். மேலும் முன்னாள் தலைமை ஆசிரியர் எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன், அதிராம்பட்டினம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுந்தர் ஆகியோர் சுதந்திர தின விழா உரை நிகழ்த்தினார்.
முன்னதாக சம்சுல் இஸ்லாம் இளைஞர் சங்கத் தலைவர் அகமது அனஸ் வரவேற்றார். விழா முடிவில் எம்.எப் முஹம்மது சலீம் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பின் பேரில் பேராசிரியர் கே. செய்யது அகமது கபீர், சம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள், இளைஞர் சங்க நிர்வாகிகள், சம்சுல் இஸ்லாம் சங்க முஹல்லாவாசிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
Thank
Adirainews
Sent from my iPhone
No comments:
Post a Comment