Ads 468x150px

Labels

Wednesday, November 10, 2010

முன்னேற்றப் பாதையில் ஷம்சுல் இஸ்லாம் சங்கம்

முன்னேற்றப் பாதையில் ஷம்சுல் இஸ்லாம் சங்கம்


அஸ்ஸலாமு-அலைக்கும்.  அல்ஹம்துலில்லாஹ்!  முறையான புத்தாக்கம் (Revamp) செய்யப்பெற்ற பின்னர், நாள் தோறும் அசர் தொழுகைக்குப்பின் செக்கடிப் பள்ளியில் கூடி, ஓர் அலுவலகம் போல் செயல்பட்டு வரும் புதிய நிர்வாகத்தின் முனைப்பான முயற்சியால், அதிரைச் சமூகப் பிரச்சினைகளும் மார்க்கப் பிரச்சினைகளும் முறையாகத் தீர்க்கப்பட்டு வருகின்றன. 

இதனைத்தான்  சங்கத்தின் மூலம் அதிரைச்  சகோதரர்கள் எதிர்பார்த்தனர்.  இந்த வகையில், நமது ஷம்சுல் இஸ்லாம் சங்கம் முன்னேற்றப் பாதையில் பீடு நடை போட்டு வருவதை நாம் கண்டு வருகின்றோம். 'சங்கமா? பங்கமா?' என்றெல்லாம் கடந்த காலத்தில் சகோதரர்கள் எதிர்க் கணை தொடுக்கும் அளவுக்கு, மோசமான நிலை ஏற்பட்டிருந்தது உண்மைதான்.  உள்ளூர் ஆலிம்களின் வழிகாட்டலில், பொருத்தமான நிர்வாக உறுப்பினர்களைத் தெரிவு செய்து, இப்போது திறம்பட நடந்து வருகின்றது நமது ஷம்சுல் இஸ்லாம் சங்கம்.

1920 முதல் இன்றுவரை தொடர்ந்து நடைபெற்றுவரும் அரசுப் பதிவு பெற்ற ( TNSR No. 35/2004 ) நமது சங்கம், பல வெற்றிச் சாதனைகளைப் புரிய ஆயத்தமாயுள்ளது.  இந்த நோக்கத்தில், முதலாவதாகச் சங்கத்திற்கு என்று புதிய கட்டடம் ஒன்று கட்டப்பட்டு வருகின்றது.  துவக்க நிலையில் உள்ள இதன் நிழற்படங்களைத்தான் நீங்கள் இப்போது பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள்.

அன்பர்களே!  புதிய நிர்வாகம் திறம்படச்  செயல்படுவதற்கு, உங்கள் அனைவரின் புரிந்துணர்வும் ஒத்துழைப்பும்  தேவை.  சமுதாயப் பணியில் எங்களுடன் கை கோர்த்து வாருங்கள்!  அல்லாஹ் துணை நிற்பான்.  வஸ்ஸலாம்.


No comments:

Post a Comment

இறைக் கட்டளை

இன்னும் நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றி பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்து விடாதீர்கள்.(அல்-குர்ஆன் 3: 103)