Monday, November 8, 2010
போலி திருமணச் சான்றிதழ் : சங்கச் செயலாளரின் கண்டன அறிக்கை!
குவைத்வாழ் அதிரைச் சகோதரர்கள் சில நாட்களுக்கு முன் எமது பார்வைக்குச் சில ஆவனங்களை மின்மடல் மூலம் அனுப்பித் தந்திருந்தார்கள். அவற்றை நிதானமாகப் பரிசோதனை செய்த பின்னர், எமது சங்கத்திலிருந்து கொடுக்கப்பட்டதாகக் கருதப்படும் திருமணச் சான்றிதழ் பொய்யானதும் போலியானதுமாகும் என்பது நிரூபணமாயிற்று. அந்தப் போலிச் சான்றிதழின் அடிப்படையிலேயே 'நோட்டரி பப்லிக்' அத்தாட்சியும், தமிழ்நாடு அரசுக் காஜியின் சான்றிதழும் பெறப்பட்டுள்ளது!
இந்த மோசடியான, போலிச் சான்றிதழ் வேலையில் ஈடுபட்ட, எங்கள் ஊரைச் சாராத அந்த மணமக்கள் மீது நாங்கள் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள எங்கள் வக்கீலிடம் புகார் செய்துள்ளோம். அவர் இதற்கான பூர்வாங்கப் பணிகளில் முனைந்துள்ளார். அவ்வாறு சம்மந்தப்பட்டவர்கள் மீது எதிர் நடவடிக்கை எடுத்து, அதனால் அந்தத் தம்பதியர் பாதிப்புக்கு உள்ளானால், அதற்கு நாங்கள் பொறுப்பாளர்களாக மாட்டோம்.
இம்முயற்சி, இது போன்ற வரம்பு மீறல்களில் ஈடுபட முனையும் மற்றவர்களையும் தடுத்து நிறுத்தும் என்பதற்காகவே மேற்கொள்ளப்படுகின்றது என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.
இப்படிக்கு,
M.S.M. அபுல் ஹசன் (செல்: 00 91 9786421535)
பொதுச் செயலாளர்
ஷம்சுல் இஸ்லாம் சங்கம்
அதிராம்பட்டினம்.
Subscribe to:
Post Comments (Atom)
இறைக் கட்டளை
இன்னும் நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றி பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்து விடாதீர்கள்.(அல்-குர்ஆன் 3: 103)
No comments:
Post a Comment