அதிரை சேர்மன் வாடியிலிருந்து மரைக்கா குளம் செல்லும் சாலை மற்றும் ஜம் ஜம் உணவகத்திலிருந்து நடுத்தெரு, ஜாவியா சாலை வழியாக ஈ.சி.ஆர் செல்லும் சாலை கடந்த பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக காட்சியளித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த இரண்டு சாலைகளையும் தரமான முறையில் அமைத்து தர வேண்டும் என அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தினர் தலைவர் அபூபக்கர் தலைமையில் பட்டுக்கோட்டை எம்.எம்.ஏ சி.வி.சேகரை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.
இந்த சந்திப்பின் போது தஞ்சை மாவட்ட அதிமுக சிறுபாண்மை பிரிவு துணை தலைவர் அஜீஸ், ஷம்சுல் இஸ்லாம் இளைஞர் சங்க தலைவர் அஹமது அனஸ், செயலாளர் முஹம்மது சலீம் ஆகியோ உடனிருந்தனர்.
No comments:
Post a Comment