சம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் 69ம் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய சங்கத்தலைவர் அபூபக்கர் அவர்கள் கொடியேற்றி சிறப்பித்தார். சங்க செயலாளர் அப்துல் காதர் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் அன்பரசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
இந்த விழாவில் சம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பின் செயலாளர் முஹம்மது சலீம் வரவேற்புரையாற்றினார். பள்ளி மாணவர் சஹல் அழகிய குரலில் கிராஅத் ஓதி நிகழ்ச்சியை தொடங்கினார். இதில் சங்கத்தின் முன்னாள் செயலாளர் பேரா.அப்துல் காதர் அவர்கள் சிறப்புரையாற்றினார். இமாம் ஷாபி பள்ளி மாணவர்கள் தேச கீதம் மற்றும் தமிழ்தாய் வாழ்த்தை பாடினர். முஃப்தி அப்துல் ஹாதி அவர்கள் துஆ ஓத, சங்க துணை செயலாளர் அப்துல் ரஹீம் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி இணிதே நிறைவடைந்தது.
இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். குறிப்பாக வயதை பொருட்படுத்தாமல் குளிர் சூழலில் பல மூத்த குடிமகன்கள் கலந்து கொண்டு தங்களின் மகிழ்வை வெளிப்படுத்தினர்.
Thanks to Adirai Pirai
No comments:
Post a Comment