Ads 468x150px

Labels

Wednesday, August 19, 2015

சம்சுல் இஸ்லாம் சங்கம் செயலாளராக பேராசிரியர் முஹம்மது அப்துல் காதர் போட்டியின்றி தேர்வு !


சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் அவசர பொதுக்குழு கூட்டம் இன்று [ 19-08-2015 ] காலை சங்க அலுவகலத்தில் நடைபெற்றது. கூட்டதிற்கு சம்சுல் இஸ்லாம் சங்கத்தலைவர் ஹாஜி முஹம்மது ஹசன் தலைமை வகித்தார். சங்க துணை செயலாளர் 'நாவலர்' நூர் முஹம்மது, பொருளாளர் ஆடிட்டர் ஹாஜி அப்துல் ஜலீல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்ஹெச் அஸ்லம் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில் சங்க நிர்வாகத்தில் காலியாக உள்ள செயலாளர் பொறுப்புக்கு புதிய நிர்வாகி தேர்ந்தெடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டன.

இதில் மஹல்லாவாசியும், காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் முதல்வருமாகிய பேராசிரியர் எம். ஏ முஹம்மது அப்துல் காதர் அவர்கள், சங்கத்தின் செயலாளர் பொறுப்புக்கு போட்டியின்றி ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து தாம் செயலாளர் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார். இந்த கூட்டத்தில் சங்க பொறுப்பாளர்கள், மஹல்லாவாசிகள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி மற்றும் படங்கள்:
நிஜாம் ( கல்லுக்கொல்லை)
 

நன்றி

No comments:

Post a Comment

இறைக் கட்டளை

இன்னும் நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றி பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்து விடாதீர்கள்.(அல்-குர்ஆன் 3: 103)