பிஸ்மில்லாஹ்
ஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்),
நமதூர் குளங்களுக்கு CMP கால்வாய் வழியாக ஆற்றுநீரைக்
கொண்டுவரும் முயற்சியில் அதிரை பேரூராட்சி சேர்மன் மற்றும் தன்னார்வலர்கள்
ஈடுபட்டிருப்பதும், இதற்காக
அதிரைவாசிகள் சிலர் நன்கொடை வழங்கினர். இந்நிலையில், திட்டமிட்டபடி அனைத்து
வேலைகளையும் செய்துமுடிக்க கூடுதல் செலவுகள் எதிர்பார்க்கப் படுவதால், வெளியூர்
மற்றும் வெளிநாடுவாழ் அதிரைவாசிகளிடமிருந்து நிதியுதவி கோரப்பட்டிருந்தது.
இதனடிப்படையில், அமீரக
கிளை சம்சுல் இஸ்லாம் சங்கத் தலைவர் சகோ.அஸ்லம் வேண்டுகோளுக்கினங்க, இதற்கான
ஏற்பாட்டை சம்சுல்
இஸ்லாம் சங்கம் ஆலோசகர் சகோ.K.ஷஃபீக் மற்றும் சகோ.ஏர்லிங்
தமீம்(செயலாளர்), சகோ.F.இப்ராகிம்(து.தலைவர்), சகோ.கமாலுதீன் ஆகியோர் ஈடுபட்டனர்,
அவசரத்தேவையின் சூழ்நிலை கருதி ஐக்கிய
அரபு அமீரகம் சம்சுல் இஸ்லாம் கிளை சார்பில் ரூ.25,000 அனுப்பி வைக்கப்பட்டது.
அதுபோல், பிறநாடுகளிலுள்ள
சம்சுல் இஸ்லாம் சங்க கிளைகளும் உதவும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment