Ads 468x150px

Labels

Saturday, December 21, 2013

அதிரை குளங்களை வளமாக்க சம்சுல் இஸ்லாம் சங்கம் நிதியுதவி


பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர்ரஹீம்

 

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்),

 

 நமதூர் குளங்களுக்கு CMP கால்வாய் வழியாக ஆற்றுநீரைக் கொண்டுவரும் முயற்சியில் அதிரை பேரூராட்சி சேர்மன் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டிருப்பதும்இதற்காக அதிரைவாசிகள் சிலர் நன்கொடை வழங்கினர். இந்நிலையில்திட்டமிட்டபடி அனைத்து வேலைகளையும் செய்துமுடிக்க கூடுதல் செலவுகள் எதிர்பார்க்கப் படுவதால்வெளியூர் மற்றும் வெளிநாடுவாழ் அதிரைவாசிகளிடமிருந்து நிதியுதவி கோரப்பட்டிருந்தது.

 

இதனடிப்படையில், அமீரக கிளை சம்சுல் இஸ்லாம் சங்கத் தலைவர் சகோ.அஸ்லம் வேண்டுகோளுக்கினங்கஇதற்கான ஏற்பாட்டை சம்சுல் இஸ்லாம் சங்கம் ஆலோசகர் சகோ.K.ஷஃபீக் மற்றும் சகோ.ஏர்லிங் தமீம்(செயலாளர்), சகோ.F.இப்ராகிம்(து.தலைவர்), சகோ.கமாலுதீன் ஆகியோர் ஈடுபட்டனர், அவசரத்தேவையின் சூழ்நிலை கருதி ஐக்கிய அரபு அமீரகம் சம்சுல் இஸ்லாம் கிளை சார்பில் ரூ.25,000 அனுப்பி வைக்கப்பட்டது.

 

அதுபோல்பிறநாடுகளிலுள்ள சம்சுல் இஸ்லாம் சங்க கிளைகளும் உதவும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

இறைக் கட்டளை

இன்னும் நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றி பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்து விடாதீர்கள்.(அல்-குர்ஆன் 3: 103)