Ads 468x150px

Labels

Monday, January 14, 2013

துபாயில் ஓர் குளுகுளு உதயம்!

இன்று (14-01-2013) மாலை 4:00 மணியளவில் ஐக்கிய அரபு அமீரகம் துபாய் மாநகரில் peach 'n' berry என்ற பெயரில் ஐஸ்கிரீம் பார்லர் திறப்பு விழா வெகு சிறப்பாக நடந்தது. 
பர்துபாயிலுள்ள ரோலா வீதியில் கலீஜ் சென்டர் பின்புறம், இம்பீரியல் ஓட்டல் எதிர்புறம் பாக்கர் முஹைபி கட்டிடத்தில் திறக்கப்பட்டுள்ள peach 'n' berry ஐஸ் கிரீம் 
பார்லரில் பிரபலமான அனைத்து வகை சுவைகளிலும், சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீம் வகைகள் கிடைக்கும்.
முட்டை, ஜெலட்டின் மற்றும் செயற்கை சுவையூட்டி அல்லது நிறமிகள் கலவாத, 100% இயற்கை சுவைகளுடன் தரமான ஐஸ்கிரீம் வகைகள் கிடைக்கும்.
இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அழைப்பிதழைக் கொண்டுவரும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் 20% திறப்புவிழா சிறப்பு தள்ளுபடி வரும் 15-பிப்ரவரி-2013 வரை 
வழங்கப்படும் என்று உரிமையாளர் ஜனாப். அஹமது ஹாஜி அவர்கள் தெரிவித்தார்.
அதிரை சகோதரரின் இந்த நிறுவனத்தை நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அறிமுகப்படுத்தி ஆதரவு வழங்கும்படி அதிரை அனைத்து முஹல்லா துபாய் கிளை தலைவர் சகோ.தமீம் அவர்கள் கேட்டுக்கொண்டார்.
செய்தி & புகைப்படம்: இப்ராஹிம். 

No comments:

Post a Comment

இறைக் கட்டளை

இன்னும் நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றி பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்து விடாதீர்கள்.(அல்-குர்ஆன் 3: 103)